• Profile
  • Contact
Monday, January 25, 2021
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

தமிழக சட்டமன்றத் தேர்தலில் செட்டியார்களுக்கு அதிக தொகுதிகள் வழங்கும் கட்சியுடன் கூட்டணி திருச்சியில் நடந்த தேசிய செட்டியார்கள் பேரவையின் மாநில மகளிர் அணி மாநாட்டில் தீர்மானம்.

ntk news by ntk news
January 12, 2021
in திருச்சி
0
தமிழக சட்டமன்றத் தேர்தலில் செட்டியார்களுக்கு அதிக தொகுதிகள் வழங்கும் கட்சியுடன் கூட்டணி திருச்சியில் நடந்த தேசிய செட்டியார்கள் பேரவையின் மாநில மகளிர் அணி மாநாட்டில் தீர்மானம்.
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing

தமிழக சட்டமன்றத் தேர்தலில் செட்டியார்களுக்கு அதிக தொகுதிகள் வழங்கும் கட்சியுடன் கூட்டணி திருச்சியில் நடந்த தேசிய செட்டியார்கள் பேரவையின் மாநில மகளிர் அணி மாநாட்டில் தீர்மானம்.

திருச்சி தமிழக சட்டமன்றத் தேர்தலில் செட்டியார்களுக்கு அதிக தொகுதிகள் வழங்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்று திருச்சியில் நடந்த தேசிய செட்டியார்கள் பேரவையின் மாநில மகளிர் அணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேசிய செட்டியார்கள் பேரவையின் மாநில மகளிரணி மாநாடு நேற்று திருச்சியில் நடந்தது. மகளிரணி மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரி மருதை தலைமை தாங்கினார்.
தேசிய செட்டியார்கள் பேரவையின் நிறுவன தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் செட்டியார்களுக்கு அதிக தொகுதிகளை வழங்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்பது, இல்லையெனில், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது.
விவசாய மேம்பாட்டு திட்டங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். விவசாயிகளுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். விவசாயத்திற்கான நீர் நிலை ஆதாரங்களை அதிகப்படுத்த வேண்டும்.
முல்லைப்பெரியாறு, கிருஷ்ணா, காவிரி, நதிகளின் நீரை அதிகளவு சேமிக்கும் வகையில் வைகை, மேட்டூர் அணையின் எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும்.
வங்கிகளில் வியாபார கடன் வழங்குவதில் 50 சதவீதம் பெண்களுக்கு வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கும் நலத்திட்டங்களில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் இடங்கள் ஒதுக்க வேண்டும்.
சிறு வியாபாரிகள் நல வாரியத்தை அமைக்க வேண்டும். ஆன்லைன் மருந்து வணிகத்தை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். அரசு பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரிகளில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது.
ஆன்லைன் லாட்டரி விற்பனையை தடை செய்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்வது.மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக தேசிய செட்டியார்கள் பேரவையின் நிறுவன தலைவர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் சுமார் 100 உட்பிரிவுகளில் செட்டியார்கள் இரண்டரை கோடி பேர் வசித்து வருகிறார்கள்.
செட்டியார்களின் பலத்தை நிரூபித்து காட்டுவதற்காக சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடலில் வருகிற பிப்ரவரி மாதம் 21-ந் தேதி 10 லட்சம் பேரை திரட்டி மாபெரும் மாநாடு நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். வீரமங்கை கற்புக்கரசி கண்ணகிக்கு தமிழக அரசு சார்பில் மதுரையில் மணிமண்டபம் கட்ட வேண்டும்.
அதேபோல் கேரள பகுதியில் உள்ள கண்ணகி கோவிலில் பவுர்ணமி வழிபாடு நடத்துவதற்கு வசதியாக எல்லை பிரச்சினையை தமிழக அரசு கேரள அரசுடன் பேசி தீர்க்க வேண்டும்.
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் செட்டியார்களுக்கு எந்த அரசியல் கட்சி அதிக தொகுதிகளை குறிப்பாக 20 தொகுதிகளை ஒதுக்குகிறதோ அப்படி ஒதுக்கும் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்போம். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் போது செட்டியார்கள் மக்கள் தொகையில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பது தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.
மாநாட்டில் பங்கேற்ற மகளிரணியினர் ஊர்வலமாக கலைநிகழ்ச்சிகள் நடத்தியபடி மாநாட்டு அரங்கிற்கு வந்தனர். மாநாட்டில் கவுரவ தலைவர்கள் பார்மா கணேசன், ஜெயராமன் மற்றும் மாநில பொருளாளர் தமிழ்செல்வன், மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் சிவகுமார், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நெய் ராஜா, டைமண்ட் ராஜா, மகளிர் அணி நிர்வாகிகள் கீதா ராமநாதன், சந்திரா ஜெகநாதன், சிவகாமி சுந்தரி, பானுப்பிரியா உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
ஷாஹுல் ஹமீது.
Previous Post

பொங்கல் பண்டிகை நெரிசலை தவிர்ப்பதற்காக திருச்சி மன்னார்புரத்தில் இன்று முதல் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது மாநகர கமிஷனர் லோகநாதன் தகவல்.

Next Post

இரண்டரை மாத ஆண் குழந்தை இருதய அறுவை சிகிச்சைக்கு உதவிய கரூர் அகில இந்திய உழைப்பாளர் ஓட்டுநர் நல சங்க நிர்வாகிகள்.

ntk news

ntk news

Next Post
இரண்டரை மாத ஆண் குழந்தை இருதய அறுவை சிகிச்சைக்கு உதவிய கரூர் அகில இந்திய உழைப்பாளர் ஓட்டுநர் நல சங்க நிர்வாகிகள்.

இரண்டரை மாத ஆண் குழந்தை இருதய அறுவை சிகிச்சைக்கு உதவிய கரூர் அகில இந்திய உழைப்பாளர் ஓட்டுநர் நல சங்க நிர்வாகிகள்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In