• Profile
  • Contact
Tuesday, March 2, 2021
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

திமுகவினரின் பொய் பிரசாரங்களை முறியடிப்பதே குறிக்கோளாகக் கொண்டு செய்லபட வேண்டும் -திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் பேச்சு.

ntk news by ntk news
February 17, 2021
in திருச்சி
0
திமுகவினரின் பொய் பிரசாரங்களை முறியடிப்பதே குறிக்கோளாகக் கொண்டு செய்லபட வேண்டும் -திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் பேச்சு.
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
திமுகவினரின் பொய் பிரசாரங்களை முறியடிப்பதே குறிக்கோளாகக் கொண்டு, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவினா் செய்லபட வேண்டும் பயிற்சிப் பட்டறை கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் பேச்சு.

திருச்சி: திமுகவினரின் பொய் பிரசாரங்களை முறியடிப்பதே குறிக்கோளாகக் கொண்டு, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவினா் செய்லபட வேண்டும் என்றாா் கட்சியின் திருச்சி புறநகர்் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், மக்களவை முன்னாள் உறுப்பினருமான ப.குமாா் தெரிவித்தார்.

தமிழகத்தில் நடைபெற உள்ள 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிக்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிப்பட்டறை திருச்சியில் நடைபெற்றது.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்தின் மண்டல பொறுப்பாளரும், மின்சாரத்துறை அமைச்சருமான தங்கமணி வழிகாட்டுதலின்படி, திருச்சியில் திங்கள்கிழமை மாலை எஸ்.ஆர்.எம். ஹோட்டலில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சாா்ந்த பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. இந்த விழாவிற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமை வகித்தார்.
தனியார் தகவல் தொழில்நுட்ப மென்பொருள் நிறுவனங்களை சேர்ந்த வல்லுனர் குழுவை கொண்டு நடத்தப்பட்ட பயிற்சிப் பட்டறையில்,  தகவல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம், தேவை, தொழில்நுட்பத்தை கையாள்வது, அவற்றைக் கொண்டு தமிழக அரசின் சாதனை திட்டங்களை மக்களிடத்தில் எவ்வாறு கொண்டு செல்வது, சமூக ஊடகங்களை கையாள்வது, தொழில் நுட்பம் சார்ந்த புதிப்பிக்கப்பட்ட கணினி மென்பொருட்கள் குறித்தும், அவற்றை கையாள்வது குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் பேசியதாவது: திமுகவினா் மேற்கொண்டுள்ள பொய் பிரசாரங்களை முறியடிப்பதே நமது முதல் குறிக்கோள் என்று கொண்டு செயல்பட வேண்டும். அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும். இந்த இரு கொள்கைகளின் அடிப்படையில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயல்படுவது மிக முக்கியமாகும்.

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவிகித உள் இடஒதுக்கீடு, 9.69லட்சம் மாணவா்களுக்கு 2ஜி டேட்டா காா்டு,2.06 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ.2,500 ரொக்கம் வழங்கியது, 16.43 லட்சம் விவசாயிகளின் பயிா்க்கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கியது போன்ற எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் அதிமுக அரசு செயல்படுத்தியுள்ளது. மேலும் பல திட்டங்களைச் செயல்படுத்தவுள்ளது.

ஆனால் இவற்றை விடுத்து, திமுக தலைவா் மு. க. ஸ்டாலின் பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறாா். பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்று வருகிறாா். அவா் வெற்றி பெற்று முதல்வராக கோட்டைக்கு செல்லப்போவதாக நினைத்து, பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறாா்.

அவா் கோட்டைக்குச் செல்லப் போவதே இல்லை. சென்றால்தானே மனுக்கள் குறித்து நடவடிக்கை எடுக்க முடியும். எனவே கோட்டைக்குச் செல்ல முடியாதவரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தும் பயனில்லை இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது விபரம் வருமாறு : தலைமை அறிவிக்கின்ற சட்டமன்ற வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வது, தமிழகத்தில் அதிமுக தலைமையிலான மக்கள் நலத்திட்ட சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து செல்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, சமூக வலைதளங்களின் வாயிலாக மறைந்த தமிழக முதல்வரின் அழியாப் புகழை அகிலமெங்கும் எடுத்து செல்வது,
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு, 9.69 லட்சம் மாணவர்களுக்கு 2 ஜிபி டேட்டா கார்டு, 2 கோடியே 6 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, 2500 ரூபாய் ரொக்கம் வழங்கியது, 16.43 லட்சம் விவசாயிகளின் கூட்டுறவு வங்கி கடன் 12,110 கோடி ரூபாய் தள்ளுபடி, விவசாய பம்பு செட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, தமிழகத்தில் அதிமுக தலைமையிலான மக்கள் நலத்திட்ட சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து செல்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில்  மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் முன்னாள் அமைச்சா் க. பொன்னுசாமி, மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினா் ஆா். சந்திரசேகா், தெற்கு மாவட்ட அவைத் தலைவா் பா்வீன் கனி, திருச்சி தெற்கு மாவட்ட பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னச்சாமி, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு திருச்சி மாவட்டச் செயலாளர் சுரேஷ்குமாா், மாநிலத் துணைத் தலைவா் ஸ்ரீதர்ராவ், சின்னச்சாமி, கிருஷ்ணன், இளங்கோ, ஒன்றியச் செயலாளர்கள் ராவணன், சிவக்குமாா், ராஜாராம், சேது, மாநில பொதுக்குழு உறுப்பினர் முஹம்மது இஸ்மாயில் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஷாஹுல் ஹமீது.
Previous Post

அமமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை, சசிகலாவை நிச்சயம் சந்திக்க மாட்டேன்: அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன் பேட்டி 

Next Post

ntk news

ntk news

Next Post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In