Social Sharing
திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 2021 ல் நல்லாட்சி.
திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 2021 ல் நல்லாட்சி அமைந்திட திருச்சிராப்பள்ளி மாவட்டம் சிறுகனூரில் திமுக 11வது மாநில மாநாடு நடைபெறுவதை யொட்டி நேற்று(18 1 2021 ) அதற்கான ஆக்கப் பணிகளை கழக முதன்மை செயலாளர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
கடந்த 1996 ,2006,2014லில் நடைபெற்ற மாநில மாநாட்டுகளுக்கு பிறகு தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சிராப்பள்ளியில் 2021 திமுக 11 வது மாநில மாநாடு தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை தொடர்ந்து. திமுகவின் 11வது மாநில மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. திருச்சி – சென்னை ரோட்டில் சிறுகனூர் பகுதில் 300 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டின் ஆயத்தப் பணிகளை திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு நேற்று ( 18 1 2021 ) தொடங்கி வைத்தார்.. இந்நிகழ்வில் மத்திய மாவட்ட பெறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியகராஜன், மாநகர செயலாளர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் லால்குடி செளந்திரபாண்டியன், துறையூர் ஸ்டாலின் குமார், ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், சேர்மன் துரைராஜ், வழக்கறிஞர் பாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அனந்தன்ஸ்