• Profile
  • Contact
Tuesday, March 9, 2021
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 22 பேர் காயம் 715 காளைகள் மற்றும் 313 வீரர்கள் பங்கேற்பு.

ntk news by ntk news
February 12, 2021
in திருச்சி
0
மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 22 பேர் காயம் 715 காளைகள் மற்றும் 313 வீரர்கள் பங்கேற்பு.
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 22 பேர் காயம் 715 காளைகள் மற்றும் 313 வீரர்கள் பங்கேற்பு.
திருச்சி: மணப்பாறை அருகே பொத்தமேட்டுப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 22 பேர் காயமடைந்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் உள்ள புனித வியாகுல மாதா ஆலய திடலில் நேற்று காலை ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெற்றது. ஊர் வழக்கப்படி ஊர் முக்கியஸ்தர்கள் புனித நீர் எடுத்து வந்த பின்னர் ஜல்லிக்கட்டை மணப்பாறை தாசில்தார் லெஜபதிராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
முதலில் செவலூர் சின்னாக்கவுண்டர் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து கோவில்காளையும் மற்ற காளைகளையும் தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டன. திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, கரூர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகள் களத்தில் தன்னை அடக்க வந்த வீரர்களிடம் ஆக்ரோசம் காட்டி தூக்கி வீசியது. இருப்பினும் தூக்கி வீசிய காளைகளை வீரர்கள் துணிவுடன் சென்று அடக்கி அசத்தினர். இதில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், சைக்கிள், தங்க, வெள்ளி நாணயங்கள், ரொக்கப்பணம் மற்றும் பாத்திரங்கள் என்று பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் அதிக காளைகளை அடக்கிய வீரா்களில் மூவருக்கு ஜல்லிக்கட்டு காளைகள் பரிசாக அளிக்கப்பட்டன. காளைகளை அடக்கியோருக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் வெள்ளிக்காசு, ரொக்கம், சைக்கிள், பீரோ, கட்டில், பாத்திரங்கள் என பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த ஜல்லிக்கட்டியில் 715 காளைகள் மற்றும் 313 வீரர்கள் பங்கேற்றனர். காளைகள் முட்டியதில் 22 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு அதே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
4 பேர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டை காண பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, ஆர்.சந்திரசேகர் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
நேற்றைய ஜல்லிக்கட்டு போட்டியில் மணப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் காலை முதலே பாதுகாப்பு பணியில் தீவிரம் காட்டினார். இந்நிலையில் மேடையில் இருந்த அவர் ஜல்லிக்கட்டை மிகவும் நேர்த்தியாக வர்ணனை செய்தார். பிடி மாடு எது?, வெற்றி பெற்ற மாடு எது? என்பதை விதிமுறைகளின் படி முறையாக தொடர்ந்து அறிவிப்பு செய்து கொண்டே இருந்தார். இதுமட்டுமின்றி விதிமுறைகளை மீறிய வீரர்களையும் கண்காணித்து அதிரடியாக வெளியேற்றினார். இதே போல் விதிமுறைகளை மீறிய மாடுகளின் உரிமையாளர்களையும் கடுமையாக கண்டித்தார். ஜல்லிக்கட்டு களத்தில் சுமார் 8 மணி நேரம் இடைவிடாமல் பணியாற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதுமட்டுமின்றி முதல் மூன்று பரிசுகளை வென்ற காளை மற்றும் காளையர்களையும் அவரே அறிவித்து அசத்தி அனைவரின் கரகோசத்தையும் பெற்றார்.
இந்த ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட மயிலாப்பூரைச்சேர்ந்த ஜஸ்டின் என்பவர் இறுதி சுற்று வரை களத்தில் நின்று மொத்தம் 18 காளைகளை அடக்கி முதல் பரிசை பெற்றார். அவருக்கு தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சார்பில் ஜல்லிக்கட்டு காளை பரிசாக வழங்கப்பட்டது. இதே போல் காளைகளுக்கு முதல் பரிசாக துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா பேரில் அவிழ்க்கப்பட்ட காளைக்கு வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணிகளில் ஏடிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான 250-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா்.
ஷாஹுல் ஹமீது.
Previous Post

தைப்பூசத்தை அரசு விடுமுறையாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து  கிராமக்கோயில் பூசாரிகள் பேரவை பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்.

Next Post

கட்டுமானப் பொருட்களின்விலை உயர்வை கண்டித்து கட்டுனர் வல்லுநர் சங்கம் சார்பில் அடையாள வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம்.

ntk news

ntk news

Next Post
கட்டுமானப் பொருட்களின்விலை உயர்வை கண்டித்து கட்டுனர் வல்லுநர் சங்கம் சார்பில் அடையாள வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம்.

கட்டுமானப் பொருட்களின்விலை உயர்வை கண்டித்து கட்டுனர் வல்லுநர் சங்கம் சார்பில் அடையாள வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In