• Profile
  • Contact
Sunday, April 18, 2021
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாநில செய்திகள்

விடியலுக்கான முழக்கம் என்ற பெயரில் திருச்சியில் தி.மு.க.வின் பிரமாண்ட பொதுக்கூட்டம்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாநாடு திடலில் 100 அடி உயர தி.மு.க.கொடியேற்றி வைத்து, பொதுக்கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

ntk news by ntk news
March 8, 2021
in மாநில செய்திகள்
0
விடியலுக்கான முழக்கம் என்ற பெயரில் திருச்சியில் தி.மு.க.வின் பிரமாண்ட பொதுக்கூட்டம்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing

விடியலுக்கான முழக்கம் என்ற பெயரில் திருச்சியில் தி.மு.க.வின் பிரமாண்ட பொதுக்கூட்டம்.  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாநாடு திடலில் 100 அடி உயர தி.மு.க.கொடியேற்றி வைத்து, பொதுக்கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

திருச்சி: விடியலுக்கான முழக்கம் என்ற பெயரில் திருச்சியில் தி.மு.க.வின் பிரமாண்ட பொதுக்கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் தமிழக முழுவதும் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இறுதியில்  10 ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டத்தை மு.க.ஸ்டாலின் வெளியிட்டு பேசுகிறார். 

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் 11-வது மாநில மாநாடு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் என்ற இடத்தில் மார்ச் 14-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக 700 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, தொண்டர்கள் அமருவதற்கும், வாகனங்கள் நிறுத்துவதற்கும் இடம் ஒதுக்கப்பட்டு முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்கிடையே தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதனை தொடர்ந்து தி.மு.க. மாநில மாநாடு ஒத்தி வைக்கப்படுவதாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். அதன் பின்னர் மாநாடு நடைபெறுவதாக இருந்த இடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரமாண்ட அளவில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. “விடியலுக்கான முழக்கம்” என்ற பெயரில் நடைபெற்ற இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பெரிய மேடை ஒன்றும், சிறிய அளவிலான 2 மேடைகளும் அமைக்கப்பட்டது. ஒரு மேடையில் மு.க.ஸ்டாலின் இருந்தார், மற்ற மேடைகளில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் இருந்தார்கள்.
மேடையின் அருகில் 300 அடி நீள அகன்ற எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான தொண்டர்கள் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டது. கூட்ட அரங்கின் நுழைவு வாயிலில் பெரியார், அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பிரமாண்ட கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. கூட்டம் நடைபெறும் இடத்தில் இருந்து பல கிலோ மீட்டர் தூரம் வரை ஏராளமான கொடிக்கம்பங்கள் நடப்பட்டு தி.மு.க. கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

திமுகவின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் திமுக தலைவர்  மு.க. ஸ்டாலின் வரவேற்க 300க்கும் மேற்பட்ட திமுகவினர் திருச்சி விமான நிலையத்தில் குவித்துள்ளனர்.  செண்டை மேளம் முழங்க வரவேற்புக்கு ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உடன், உதயநிதி ஸ்டாலின், கேஎன்.நேரு, திருச்சி சிவா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கனிமொழி, துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் திருச்சி விமான நிலையத்தில் இருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு பிரச்சார வேனில் பொதுக்கூட்டத்திற்கு மைதானத்திற்கு வந்தார்கள்.

பின்னர் இன்று நண்பகல் 12.30 மணிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 100 அடி உயர தி.மு.க.கொடியேற்றி வைத்து, பொதுக்கூட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து தி.மு.க. பிரசார காணொளிகள், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் காணொளிகள் ஒளிபரப்பபட்டது. தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு வரவேற்புரை  நிகழ்த்தினார். மாலை 3 மணி முதல் பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி ஆகிய துறைகளின் தற்போதைய நிலையை விளக்கி தி.மு.க. முன்னணியினர், வல்லுனர்கள்  பேசினார்கள்.

இன்று மாலை 4 மணிக்கு தமிழ் பண்பாடு மற்றும் பெருமையை பறைசாற்றும் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. 4.15 மணிக்கு சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்பு, சமூகநீதி ஆகிய துறைகளின் தற்போதைய நிலையை தி.மு.க. முன்னணியினர் மற்றும் வல்லுநர்கள் பேசுகிறார்கள். 5.15 மணிக்கு தமிழ்ப்பண்பாடு மற்றும் பெருமையை பறை சாற்றும் கலை நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்ட அரங்கிற்கு வந்து மக்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.

மாலை 6 மணிக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசுகிறார். அதன்பிறகு மாலை 6.30 மணிக்கு தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டத்தை வெளியிட்டு மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். முன்னதாக பல்வேறு தலைப்புகளில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பேசுகிறார்கள். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சியில் நடைபெறவுள்ள இந்த பொதுக்கூட்டத்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2 லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுக்கூட்ட நுழைவு வாயில் அருகே ஏராளமான ஸ்டால்களும் அமைக்கப்பட்டது..

ஷாஹுல் ஹமீது.
Previous Post

இன்றைய நாளுக்கான "வாழ்வளிக்கும் வார்த்தை"

Next Post

திருச்சி சமயபுரம் கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்.

ntk news

ntk news

Next Post
திருச்சி சமயபுரம் கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்.

திருச்சி சமயபுரம் கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In